மழைத்துளிகளாய் மாறி
மண்ணை சேர்ந்திட
ஆசைப்பட்டேன் -தடைகளாய்
மரங்களும் செடிகளும்
ஆங்காங்கே!
நதி நீராய் மாறி
கடலை சேர்ந்திட
ஆசைப்பட்டேன் - தடைகளாய்
காண்களும் கால்வாய்களும்
ஆங்காங்கே!
மின்மினிப்பூச்சியாய் மாறி
உலகை ஒளியூட்டிட
ஆசைப்பட்டேன் தடைகளாய்
சந்திரனும் சூரியனும்
ஆங்காங்கே!
நிறைவேறாத ஆசைகள்
நித்திரையில்
கனவுகளாகி போகையில்
தடைகளாய்
விடியற் சேவலின் கூவலும்
விடைப்பெற்றுக்கொண்ட இரவுகளின் சப்தங்களும்
அங்கே!